என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஓட்டப்பிடாரம் அருகே குடிபோதையில் தொழிலாளியை குத்திக்கொன்ற நண்பர்
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது46). தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் ராமதாஸ்(50). நண்பர்களான இவர்கள் இருவரும் தூத்துக்குடி துறைமுகத்தில் கூலி வேலை செய்து வந்தனர். வேலை முடிந்ததும் தினமும் மாலையில் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை புதூர் பாண்டியாபுரத்தில் இருவரும் சேர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி ராமதாசை தாக்கினார். உடனே அருகில் நின்றவர்கள் அவர்களை விலக்கிவிட்டனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு கருப்பசாமி தனது மனைவி பேச்சியம்மாள், மகள் பொன்செல்வம் ஆகியோருடன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ராமதாஸ் கருப்பசாமியுடன் மீண்டும் தகராறு செய்தார். திடீரென ராமதாஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கருப்பசாமியை சரமாரியாக குத்தினார். இதை பார்த்த கருப்பசாமியின் மனைவி, மகள் தடுத்தனர். அவர்களை கீழே தள்ளிவிட்டு ராமதாஸ் கருப்பசாமியை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார்.
கத்திக்குத்தில் பலத்த காயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுபற்றி புதியம்புத்தூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஓட்டப்பிடாரம் டி.எஸ்.பி சீமைச்சாமி, புதியம்புத்தூர் சப்இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளி ராமதாசை கைது செய்தனர். சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்