search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட் வெற்றி இந்தியாவுக்கு பெருமை: விஞ்ஞானிகளுக்கு பொன். ராதாகிருஷ்ணன் பாராட்டு
    X

    பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட் வெற்றி இந்தியாவுக்கு பெருமை: விஞ்ஞானிகளுக்கு பொன். ராதாகிருஷ்ணன் பாராட்டு

    பி.எஸ்.எல்.வி-சி 38 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பி.எஸ்.எல்.வி., - சி 38 ராக்கெட் மூலம், ‘கார்ட் டோசாட்-2’ செயற்கைகோளை வெற்றிகரமாக இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயலால் இந்தியா உலக அரங்கில் நிமிர்ந்து நிற்பதுடன், ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடைய செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    Next Story
    ×