என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பீளமேட்டில் வாடகை வீட்டில் விபசாரம்: பெண் புரோக்கர் கைது
கோவை:
கோவை பீளமேடு ஆர்.கே. மில் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் சென்றது.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று மாலை திடீரென அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்த திருப்பூர் மற்றும் தேனியை சேர்ந்த 2 அழகிகளை போலீசார் மீட்டனர்.
இவர்களுக்கு பண ஆசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்திய கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த புரோக்கர் கவிதா(வயது 38), கோல்டு வின்ஸ் பகுதியை சேர்ந்த ராஜாராம்(31) ஆகியோரை கைது செய்தனர்.
கவிதா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இந்த வீட்டை மாதம் ரூ.10 ஆயிரம் வாடகைக்கு எடுத்து விபசாரத்தை நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கவிதா, ராஜாராம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட அழகிகளை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்