search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீளமேட்டில் வாடகை வீட்டில் விபசாரம்: பெண் புரோக்கர் கைது
    X

    பீளமேட்டில் வாடகை வீட்டில் விபசாரம்: பெண் புரோக்கர் கைது

    பீளமேட்டில் வாடகை வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. போலீசார் திடீரென அந்த வீட்டில் சோதனை நடத்தி பெண் புரோக்கரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை பீளமேடு ஆர்.கே. மில் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் சென்றது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று மாலை திடீரென அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கிருந்த திருப்பூர் மற்றும் தேனியை சேர்ந்த 2 அழகிகளை போலீசார் மீட்டனர்.

    இவர்களுக்கு பண ஆசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்திய கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த புரோக்கர் கவிதா(வயது 38), கோல்டு வின்ஸ் பகுதியை சேர்ந்த ராஜாராம்(31) ஆகியோரை கைது செய்தனர்.

    கவிதா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இந்த வீட்டை மாதம் ரூ.10 ஆயிரம் வாடகைக்கு எடுத்து விபசாரத்தை நடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கவிதா, ராஜாராம் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    மீட்கப்பட்ட அழகிகளை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×