என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் இருந்து கடலூருக்கு 8 கிலோ தங்க நகையுடன் பஸ்சில் வந்த வாலிபர்கள்
Byமாலை மலர்21 Jun 2017 8:25 AM GMT (Updated: 21 Jun 2017 8:25 AM GMT)
புதுவையில் இருந்து கடலூருக்கு 8 கிலோ தங்க நகையுடன் பஸ்சில் வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், நகைகளை பாதுகாப்புடன் எடுத்து வருமாறு கூறி, அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை போலீசார் நிறுத்தி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் வந்த 2 வாலிபர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 8 கிலோ தங்க நகைகள் இருந்தன.
இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். தங்க நகைகளை கொண்டு வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் பெங்களூருவில் நகைப்பட்டறை வைத்து இருப்பதாகவும், அங்கு வடிவமைக்கப்படும் புதிய நகைகளை கடைகளில் காண்பித்து விற்பனை செய்வதற்காகவும், புதுவையில் இருந்து நகைகளை எடுத்து வந்ததாகவும் கூறினர். அதற்குரிய ஆவணங்களையும் போலீசாரிடம் காண்பித்தனர். அந்த வாலிபர்கள் கூறிய தகவல்கள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து நகைகளை பாதுகாப்புடன் எடுத்து வருமாறு கூறி, அவர்களை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை போலீசார் நிறுத்தி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் வந்த 2 வாலிபர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 8 கிலோ தங்க நகைகள் இருந்தன.
இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். தங்க நகைகளை கொண்டு வந்த வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் பெங்களூருவில் நகைப்பட்டறை வைத்து இருப்பதாகவும், அங்கு வடிவமைக்கப்படும் புதிய நகைகளை கடைகளில் காண்பித்து விற்பனை செய்வதற்காகவும், புதுவையில் இருந்து நகைகளை எடுத்து வந்ததாகவும் கூறினர். அதற்குரிய ஆவணங்களையும் போலீசாரிடம் காண்பித்தனர். அந்த வாலிபர்கள் கூறிய தகவல்கள் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து நகைகளை பாதுகாப்புடன் எடுத்து வருமாறு கூறி, அவர்களை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X