search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.நகர் மேட்லி சுரங்க பாதையில் 19-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
    X

    தி.நகர் மேட்லி சுரங்க பாதையில் 19-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

    தியாகராய நகர் மேட்லி சுரங்கப்பாதையில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் வருகிற 19-ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகர போக்கு வரத்து காவல்துறை சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தியாகராய நகர் மேட்லி சுரங்கப்பாதையில் வருகிற 19-ந் தேதி சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதையொட்டி சென்னை பெருநகர காவல், போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து மாற்றங்கள் 19-ந் தேதி முதல் செய்யப்பட உள்ளன. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு தரவேண்டுகிறோம்.

    மேற்கு மாம்பலத்திலிருந்து மேட்லி சுரங்கப்பாதை வழியாக தியாகராயநகர் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். அதில் மாற்றம் இல்லை.

    தியாகராய நகரிலிருந்து மேட்லி சாலை வழியாக மேற்கு மாம்பலம் செல்லும் வாகனங்கள் மேட்லி சந்திப்பு - தெற்கு உஸ்மான் சாலை - புதிய போக் சாலை - 70 அடி சாலை- அரங்க நாதன் சுரங்கப்பாதை வழியாக செல்லலாம். (அல்லது) மேட்லி சாலை சந்திப்பு - மேட்லி சாலை- முத்துரங்கன் சாலை- புதிய போக் சாலை - 70 அடி சாலை - அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×