search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி முழுவதும் வறண்டது
    X

    பூண்டி ஏரி முழுவதும் வறண்டது

    பருவ மழை பொய்த்ததின் காரணமாகவும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாகவும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்துவிட்டது. பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு பாலவனமாக காட்சி அளிக்கிறது.
    திருவள்ளூர்:

    சென்னை நகர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலா தலமாகவும் பூண்டி ஏரி விளங்குகிறது. பொதுப்பணித்துறையினரால் ரூ. 65 லட்சம் மதிப்பில் கடந்த 1940-ம் ஆண்டு சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. 16 பெரிய மதகுகளைக் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி. 34.98 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 138 அடியும், ஏரியின் நீர்மட்ட உயரம் 35 அடியாகவும் அமைக்கப்பட்டது.

    1944ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த் தேக்கத்தை ஜூன் 14-ந் தேதி அப்போதைய சென்னை மேயராக இருந்த ஆர்தர் ஹோப் திறந்து வைத்தார். தற்போது பூண்டி ஏரிக்கு 72 வயது நிறைவடைந்துள்ளது.

    கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது.

    கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைந்ததை அடுத்து தண்ணீர் திறக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லை.

    பருவ மழை பொய்த்ததின் காரணமாகவும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாகவும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்துவிட்டது. பூண்டி ஏரி முற்றிலும் வறண்டு பாலவனமாக காட்சி அளிக்கிறது.

    இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் 35 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மேலும் இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இன்றி காணப்படுவதால் அங்கு உள்ளவர்கள் ஆடு, மாடுகள் மேய்ந்து வருகின்றனர்.
    Next Story
    ×