search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாஸ்பேட்டை வங்கி மானேஜர் வீட்டில் 90 பவுன் கொள்ளை: மகனின் கல்லூரி நண்பர்கள் 2 பேர் கைது
    X

    லாஸ்பேட்டை வங்கி மானேஜர் வீட்டில் 90 பவுன் கொள்ளை: மகனின் கல்லூரி நண்பர்கள் 2 பேர் கைது

    லாஸ்பேட்டையில் வங்கி மானேஜர் வீட்டில் 90 பவுன் கொள்ளையடித்த சம்பவத்தில் மகனின் கல்லூரி நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் 4-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ஜெயசீலன். இவர் புதுவையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பீரோவில் வைத்திருந்த 90 பவுன் நகை மர்மமான முறையில் கொள்ளை போனது.

    இதுகுறித்து புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஜெயசீலன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் குறித்து போலீசார் தகவல் சேகரித்தனர். அப்போது ஜெயசீலனின் மகன் என்ஜினீயரிங் மாணவரான தீபக்கின் கல்லூரி நண்பர்களான திலிப்குமார், விக்னேஷ் ஆகியோர் தீபக்கின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் திலீப்குமாரையும், விக்னேசையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் இருவரும் சேர்ந்து நகையை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து திலிப்குமாரையும், விக்னேசையும் கைது செய்தனர்.  மேலும் அவர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×