search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசலில் 48-வது நாளாக நீடிக்கிறது ‘ஹைட்ரோ கார்பன்’ எதிர்ப்பு போராட்டம்
    X

    நெடுவாசலில் 48-வது நாளாக நீடிக்கிறது ‘ஹைட்ரோ கார்பன்’ எதிர்ப்பு போராட்டம்

    நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தை தீவிரமடைய செய்யும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த பிப்ரவரி 16-ந்தேதியில் இருந்து போராட்டம் நடைபெற்றது. மத்திய-மாநில அரசுகள் அளித்த வாக்குறுதியை ஏற்று, 41 நாட்களாக நடந்த போராட்டம் கடந்த மார்ச் 9-ந்தேதி கைவிடப்பட்டது.

    பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது. இதனால் விரக்தியடைந்த இளைஞர்கள் கடந்த ஏப்ரல் 12-ந்தேதி 2-ம் கட்ட போராட்டத்தை தொடங்கினர். போராட்டக் களத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே மக்கள் ஆதரவு அளித்தாலும் விடாது போராடி வருகின்றனர்.

    இந்தநிலையில் போராட்டக்களத்தை தீவிரப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று 48-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    நேற்று நடந்த போராட்டத்தில் ஆலங்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன், திட்டம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்த நெடுவாசலை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, செந்தில்தாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    போராட்டக்குழுவினர் கூறும் போது, எங்களின் அழைப்பை ஏற்று பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்களை சேர்ந்தோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த திட்டம் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
    Next Story
    ×