search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் அருகே தோட்ட காவலாளி வெட்டி படுகொலை: கொள்ளை கும்பல் வெறிச்செயல்
    X

    வேலூர் அருகே தோட்ட காவலாளி வெட்டி படுகொலை: கொள்ளை கும்பல் வெறிச்செயல்

    வேலூர் அருகே தோட்ட காவலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பள்ளிகொண்டா இறைவன் காடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 50). இவரது மனைவி சாவித்திரி (42), மகன் மணி (20). வேலூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கு இறைவான்காட்டில் சொந்தமாக தென்னை, மா, வாழை மர தோட்டங்கள் உள்ளன.

    இந்த தோட்டத்தில் தங்கி காவலாளியாக பாபு வேலை செய்து வந்தார். பகல், இரவு நேரங்களில் தோட்டத்தில் தேங்காய், மாங்காய் திருட்டை தடுக்க அவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம்போல் பாபு, காவல் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    நள்ளிரவு தோட்டத்திற்குள் அரிவாளுடன் புகுந்த மர்ம நபர்கள், பாபுவை வெட்டி படுகொலை செய்தனர். கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் விழுந்ததில், பாபு சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து துடிதுடித்து இறந்தார்.

    அதன்பிறகு, கொலை கும்பல் தோட்டத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டது. இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், காவலாளி பாபு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ந்து போயினர்.

    இதுப்பற்றி, பள்ளி கொண்டா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலையுண்ட பாபுவின் உடலை பார்வையிட்டனர்.

    நள்ளிரவில், தேங்காய் திருடர்கள் தோட்டத்திற்குள் புகுந்து கைவரிசை காட்ட முயன்றபோது ஏற்பட்ட தகராறில் காவலாளி பாபு, தேங்காய் பறிக்க வைத்திருந்த அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பாபுவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×