என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம்
Byமாலை மலர்27 May 2017 11:31 AM GMT (Updated: 27 May 2017 11:31 AM GMT)
புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து மாட்டு இறைச்சியை நடு ரோட்டில் வெட்டும் போராட்டத்தை நடத்தினர்.
புதுச்சேரி:
மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்து இருந்தது. இந்த தடைக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அது போல் மாட்டு இறைச்சி தடைக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து மாட்டு இறைச்சியை நடு ரோட்டில் வெட்டும் போராட்டத்தை இன்று நடத்தினர். மூலக்குளம் 4 முனை சந்திப்பில் நடந்த இந்த போராட்டத்துக்கு விடுதலை கட்சியின் தொகுதி செயலாளர் தீந்தமிழன் தலைமை தாங்கினார். தமிழகம்- புதுவை மாநில துணை பொது செயலாளர் பாவாணன், நிர்வாகிகள் அன்பரசன், சாந்தகுமார், முபாரக், கபிலன், பஷீர் அகமது, இன்பதமிழன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 150-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்து இருந்தது. இந்த தடைக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அது போல் மாட்டு இறைச்சி தடைக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாட்டு இறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை கண்டித்து மாட்டு இறைச்சியை நடு ரோட்டில் வெட்டும் போராட்டத்தை இன்று நடத்தினர். மூலக்குளம் 4 முனை சந்திப்பில் நடந்த இந்த போராட்டத்துக்கு விடுதலை கட்சியின் தொகுதி செயலாளர் தீந்தமிழன் தலைமை தாங்கினார். தமிழகம்- புதுவை மாநில துணை பொது செயலாளர் பாவாணன், நிர்வாகிகள் அன்பரசன், சாந்தகுமார், முபாரக், கபிலன், பஷீர் அகமது, இன்பதமிழன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 150-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X