என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் 2 வீடுகளில் 35 பவுன் நகை- ரூ.4½ லட்சம் கொள்ளை
Byமாலை மலர்27 May 2017 11:15 AM GMT (Updated: 27 May 2017 11:15 AM GMT)
தஞ்சையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை மற்றும் ரூ.4½ லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருளானந்த நகர் 10-வது கிராஸ் பகுதியில் வசிப்பவர் இளமுருகன் (வயது 62) ஓய்வுபெற்ற பேராசிரியர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வடுவூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை, ரூ.4½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இன்று வீடு திரும்பிய இளமுருகன் தனது வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகளா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை முனிசிபல் காலனியில் வசிப்பவர் ரவிச்சந்திரன். பெட்ரோல் பங்க் உரிமையாளர். இவர் வீட்டை பூட்டிவிட்டு கோடை சுற்றுலாவுக்கு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார்.
இன்று வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த 2 விலை உயர்ந்த கார்களும் திருட்டு போய் இருப்பதை அறிந்து திடுக்கிட்டார்.
அவர் வீட்டில் சென்று பார்த்தபோது 7 கிலோ வெள்ளி பொருட்கள், 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் முனிசிபல் காலனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் அருளானந்த நகர் 10-வது கிராஸ் பகுதியில் வசிப்பவர் இளமுருகன் (வயது 62) ஓய்வுபெற்ற பேராசிரியர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வடுவூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை, ரூ.4½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இன்று வீடு திரும்பிய இளமுருகன் தனது வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் ஈடுபட்டது பழைய குற்றவாளிகளா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை முனிசிபல் காலனியில் வசிப்பவர் ரவிச்சந்திரன். பெட்ரோல் பங்க் உரிமையாளர். இவர் வீட்டை பூட்டிவிட்டு கோடை சுற்றுலாவுக்கு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார்.
இன்று வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த 2 விலை உயர்ந்த கார்களும் திருட்டு போய் இருப்பதை அறிந்து திடுக்கிட்டார்.
அவர் வீட்டில் சென்று பார்த்தபோது 7 கிலோ வெள்ளி பொருட்கள், 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவர் மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் முனிசிபல் காலனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X