என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆதம்பாக்கம் சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து: ரூ. 1 கோடி பொருட்கள் சேதம்
Byமாலை மலர்27 May 2017 9:50 AM GMT (Updated: 27 May 2017 9:50 AM GMT)
ஆதம்பாக்கம் சூப்பர் மார்க்கெட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 47). இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்
இந்த சூப்பர் மார்க்கெட்டின் கீழ்தளத்தில் அனைத்துப் பொருட்களும் விற்பனைக்கு இருந்தன. முதல் மாடியில் பொருட்கள் வைப்பதற்கான ‘குடோன்’ இருந்தது.
இன்று காலை 9 மணியளவில் ‘சூப்பர் மார்கெட்’ கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அவர்கள் மெயின்சுவிட்சை போட்டனர்.
அப்போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கடை ஊழியர்கள் முதலில் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமள என்று பரவி கீழ்தளம் முழுவதும் பரவிக்கொண்டது.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கிண்டி, வேளச்சேரியில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். இதே போல் 3 தண்ணீர் லாரிகள் மூலமும் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்து காரணமாக ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 47). இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்
இந்த சூப்பர் மார்க்கெட்டின் கீழ்தளத்தில் அனைத்துப் பொருட்களும் விற்பனைக்கு இருந்தன. முதல் மாடியில் பொருட்கள் வைப்பதற்கான ‘குடோன்’ இருந்தது.
இன்று காலை 9 மணியளவில் ‘சூப்பர் மார்கெட்’ கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அவர்கள் மெயின்சுவிட்சை போட்டனர்.
அப்போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. கடை ஊழியர்கள் முதலில் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமள என்று பரவி கீழ்தளம் முழுவதும் பரவிக்கொண்டது.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கிண்டி, வேளச்சேரியில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். இதே போல் 3 தண்ணீர் லாரிகள் மூலமும் தீயை அணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்து காரணமாக ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமானது.
தீ விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X