search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த முத்துராஜ்
    X
    தற்கொலை செய்த முத்துராஜ்

    களக்காடு அருகே வாழைகள் கருகியதால் விவசாயி தற்கொலை

    களக்காடு அருகே விவசாயி முத்துராஜ் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கலுங்கடியை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது49)விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 1300 வாழைகள் வைத்திருந்தார். பருவ மழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டது.

    எனவே முத்துராஜ் கடன் வாங்கி வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சினார். ஆனால் கடும் வறட்சி காரணமாக வாழைகள் கருகியதால் முத்துராஜ் நஷ்டமடைந்தார். மேலும் கடன் கொடுத்தவர்களும் கடனை திருப்பி கேட்டனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த முத்துராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    முத்துராசுக்கு இசைக்கனி(42)என்ற மனைவியும், சரண்யா(23), ஷாலினி(18), சித்ரா(15) என்ற 3 மகள்களும், பாலமுரளி(21) என்ற மகனும் உள்ளனர். இது குறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் கடந்த 22-ந் தேதி கருப்பன் தோப்பில் விவசாயி சுரேஷ் என்பவர் தற்கொலை செய்த நிலையில் விவசாயி முத்துராஜ் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×