என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
உடல்நலம் பாதித்த கணவர் வேலைக்கு போக முடியாததால் மனைவி தீக்குளித்து பலி
சென்னிமலை:
சென்னிமலை,மேற்கு வெப்பிலி, அரிஜன காலானியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ராதா(வயது35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழனிசாமியும், ராதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவரும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு மாத்திரை சாப்பிட்டு வருகிறார். இதன் காரணமாக பழனியால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குடும்பத்தில் வறுமை வாட்ட தொடங்கியது.
இதனால் ராதா கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் இருந்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து ராதாவை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராதா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்