search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை வேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருண ஜெபம்
    X

    மழை வேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருண ஜெபம்

    மழைவேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் வருண ஜெபம் நடைபெற்றது.
    சிதம்பரம்:

    மழைவேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் வருண ஜெபம் நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை குளத்தில் பொது தீட்சிதர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.

    பின்னர் குளத்திற்குள் இறங்கிய தீட்சிதர்கள், வேத மந்திரங்களை உச்சரித்தனர். தொடர்ந்து 4 மணி நேரம் இந்த பூஜை நடைபெற்றது.

    இதில் தீட்சிதர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பூஜை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.
    Next Story
    ×