search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீடாமங்கலம் அருகே கல்லூரி மாணவர் கொலை: 3 பேர் கைது
    X

    நீடாமங்கலம் அருகே கல்லூரி மாணவர் கொலை: 3 பேர் கைது

    நீடாமங்கலம் அருகே மாணவர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள சித்தமல்லி ஊராட்சி ஒரத்தூர் கீழத் தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் நவீன் என்கிற வித்யாசாகர் (21). இவர் கும்பகோணம் அருகே உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். தற்போது அதே ஊரில் உள்ள திருவள்ளூவர் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வித்யாசாகரும் அவரது சித்தப்பா வடுகநாதனும் மோட்டார் சைக்கிளில் ஒரத்தூர் சென்றனர். அப்போது எதிரே வந்த கார் மோதுவது போல் வந்தது.

    இதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பலத்த காயம் அடைந்த வித்யாசாகரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து நீடாமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அதே பகுதியை சேர்ந்த 8 பேர் மீது  வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் செல்வராஜன், அவரது மகன் முருகன், செந்தில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
    Next Story
    ×