search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இப்ராகிம், பிரபாகரன்
    X
    இப்ராகிம், பிரபாகரன்

    புதுவை ஓட்டலில் காதலனுடன் தங்கிய சிறுமியை கற்பழித்த லாட்ஜ் ஊழியர்

    புதுவை ஓட்டலில் காதலனுடன் தங்கிய சிறுமியை கற்பழித்த லாட்ஜ் ஊழியர் மற்றும் காதலனை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளரின் 13 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    இவள் பேஸ்புக் பயன்படுத்துவது வழக்கம். திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டை சேர்ந்த இப்ராகிம் (வயது 21) என்பவர் அந்த சிறுமியுடன் பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டார்.

    தன்னை சிவா என்ற பெயரில் அறிமுகப்படுத்தி கொண்ட அவர், தொடர்ந்து பேஸ்புக் மூலம் தகவல்களை பரிமாறி வந்தார். அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி இப்ராகிமுடன் தலைமறைவானார். அவர்கள் இருவரும் சென்னை சென்று விட்டு புதுவைக்கு வந்தனர். அப்போது பஸ் நிலைத்தில் உள்ள ஆட்டோ டிரைவரிடம் லாட்ஜுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

    அவர் புதுவை அருகே உள்ள தமிழக பகுதியான குயிலாப்பாளையத்துக்கு அழைத்து சென்று அங்குள்ள லாட்ஜில் விட்டார். அங்கு அறை எடுத்து தங்கினார்கள்.

    அப்போது இப்ராகிம் சிறுமியை பலமுறை கற்பழித்துள்ளார்.

    இந்த நிலையில் இப்ராகிமின் செல்போனை எடுத்து சிறுமி பார்த்தாள். அதில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்தன. மேலும் அவரது பெயர் சிவா அல்ல, இப்ராகிம் என்றும் தெரிய வந்தது.

    இதனால் இப்ராகிமுடன் சிறுமி தகராறு செய்தாள். இதில், கோபம் அடைந்த இப்ராகிம் சிறுமியை தனியாக அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டார்.

    இந்த லாட்ஜில் பிரபாகரன் (27) என்பவர் மேற்பார்வையாளராக இருந்தார். அவர் சிறுமிக்கு உதவி செய்வதாக கூறி ஏமாற்றி நாடகம் ஆடினார். அவரும் அந்த சிறுமியை கற்பழித்தார்.

    இந்த நிலையில் சிறுமி புதுவையில் இருந்து தப்பி சொந்த ஊருக்கு சென்றார். தனது பெற்றோர்களிடம் நடந்த வி‌ஷயத்தை கூறினார்.

    அவர்கள் திருப்பூர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இப்ராகிமை கைது செய்தனர்.

    மேலும் புதுவைக்கு வந்து அந்த லாட்ஜில் விசாரணை நடத்தினார்கள். சிறுமியை கற்பழித்த லாட்ஜ் ஊழியர் பிரபாகரனையும் கைது செய்தனர்.

    சிறுமி கற்பழிக்கப்பட்டதற்கு லாட்ஜில் பணியாற்றிய வேறு ஊழியர்களும் உடந்தையாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

    எனவே, அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். லாட்ஜ் அமைந்துள்ள பகுதியான ஆரோவில் போலீசாரும் தனியாக விசாரணை நடத்துகிறார்கள்.

    இளம் ஜோடிகள் லாட்ஜில் தங்கினால் அவர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட முழு விவரங்களையும் பெற வேண்டும் என்ற விதிகள் உள்ளன. அதை மீறி எப்படி இவர்களை லாட்ஜில் தங்க அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.

    எனவே லாட்ஜ் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசார் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த லாட்ஜ் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானதாகும். அவரிடமும் போலிசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இந்த ஜோடியை லாட்ஜுக்கு அழைத்து சென்று விட்ட ஆட்டோ டிரைவரையும் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×