என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விழுப்புரத்தில் இன்று மணக்கோலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய பட்டதாரி பெண்
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேலு. எம்.ஏ.பி.எட்.படித்துள்ளார். இவர் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆயந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
அதே திருக்கோவிலூர் அருகே உள்ள சின்ன இடையாறு கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரது மகள் ஆனந்தி பி.எஸ்.சி.பி.எட். பட்டதாரி.
ஆனந்திக்கும் வேலுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் இன்று காலை விழுப்புரம் அருகே காணையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஆனந்தி ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். எனவே இன்று காலை திருமணம் முடிந்ததும் அவர் நாராயணன் நகரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிக்கு வந்தார். அவருடன் அவரது கணவர் வேலுவும் வந்திருந்தார்.
தேர்வு அறைக்கு சென்று ஆனந்தி தேர்வு எழுதினார். தேர்வு அறைக்கு வெளியே மண மகன் வேலு காத்திருந்தார்.
இதுகுறித்து ஆனந்தியின் தாயார் கிரிஜா கூறும்போது:-
எனது மகள் எப்போதும் படித்து கொண்டே இருப்பார் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். இன்று காலை திருமணம் முடிந்ததும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதுவேன் என்று கூறினார். அவர் ஆசையை நிறைவேற்ற இன்று மணக்கோலத்தில் தேர்வு எழுத அழைத்து வந்தோம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்