என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிருமாம்பாக்கம் அருகே தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர் வீட்டில் ரூ. 1 லட்சம் கொள்ளை
பாகூர்:
காரைக்கால் வரிச்சிக்குடியை சேர்ந்தவர் காசிராஜபூபதி (வயது37). இவர் தனது மனைவியுடன் புதுவை கன்னிய கோவிலில் உள்ள சீனிவாசா கார்டனில் வாடகை வீட்டில் தங்கி இருவரும் கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஊழியர்களாக வேலைபார்த்து வருகின்றனர்.
சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மதியம் சாப்பிடுவதற்காக காசிராஜபூபதி வீட்டுக்கு வந்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு காசிராஜபூபதி அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ. 1 லட்சமாகும்.
இதுகுறித்து காசிராஜா பூபதி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த 2 நாட்களுக்கு முன்புதான் பாதுகாப்பு கருதி வீட்டில் வைத்திருந்த 50 பவுன் நகையை காசிராஜபூபதி வங்கி லாக்கரில் வைத்ததால் அந்த நகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்