என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வக்கீல் கைது
Byமாலை மலர்28 April 2017 4:33 AM GMT (Updated: 28 April 2017 4:33 AM GMT)
நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 51 வயது வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையை சேர்ந்தவர் வக்கீல் ஜான் (வயது 51). இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் தனக்கு வாரிசு இல்லையே? என்று வக்கீல் ஜான் மனவேதனையில் இருந்து வந்தார்.
இதையடுத்து மறுமணம் செய்ய தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பெண் பார்த்து வந்துள்ளார். அப்போது 17 வயது சிறுமி தாய்- தந்தை இல்லாமல் உறவினர்கள் அரவணைப்பில் இருந்து வந்ததை அறிந்த ஜான் அந்த சிறுமியின் உறவினர்களுக்கு பண ஆசை காட்டி அவரை 2-வது திருமணம் செய்தார்.
இந்த விவரத்தை ஜான் தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் மறைத்து அந்த சிறுமியுடன் குருசு குப்பத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். 9 மாத கர்ப்பிணியான அந்த சிறுமி புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாள்.
இதுபற்றிய தகவல் புதுவை குழந்தைகள் நல அமைப்பின் பாதுகாப்பு தலைவி வித்யா ராம் குமாருக்கு தெரிய வந்தது. அவர், இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வக்கீல் ஜான் அந்த சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தை திருமணம் செய்தல், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் (போஸ்கோ) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வக்கீல் ஜானை கைது செய்தனர்.
புதுவையை சேர்ந்தவர் வக்கீல் ஜான் (வயது 51). இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் தனக்கு வாரிசு இல்லையே? என்று வக்கீல் ஜான் மனவேதனையில் இருந்து வந்தார்.
இதையடுத்து மறுமணம் செய்ய தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பெண் பார்த்து வந்துள்ளார். அப்போது 17 வயது சிறுமி தாய்- தந்தை இல்லாமல் உறவினர்கள் அரவணைப்பில் இருந்து வந்ததை அறிந்த ஜான் அந்த சிறுமியின் உறவினர்களுக்கு பண ஆசை காட்டி அவரை 2-வது திருமணம் செய்தார்.
இந்த விவரத்தை ஜான் தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் மறைத்து அந்த சிறுமியுடன் குருசு குப்பத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். 9 மாத கர்ப்பிணியான அந்த சிறுமி புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாள்.
இதுபற்றிய தகவல் புதுவை குழந்தைகள் நல அமைப்பின் பாதுகாப்பு தலைவி வித்யா ராம் குமாருக்கு தெரிய வந்தது. அவர், இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வக்கீல் ஜான் அந்த சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தை திருமணம் செய்தல், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் (போஸ்கோ) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வக்கீல் ஜானை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X