search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வக்கீல் கைது
    X

    சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வக்கீல் கைது

    நீண்ட காலமாக குழந்தை இல்லாததால் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 51 வயது வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவையை சேர்ந்தவர் வக்கீல் ஜான் (வயது 51). இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் தனக்கு வாரிசு இல்லையே? என்று வக்கீல் ஜான் மனவேதனையில் இருந்து வந்தார்.

    இதையடுத்து மறுமணம் செய்ய தனக்கு தெரிந்தவர்கள் மூலம் பெண் பார்த்து வந்துள்ளார். அப்போது 17 வயது சிறுமி தாய்- தந்தை இல்லாமல் உறவினர்கள் அரவணைப்பில் இருந்து வந்ததை அறிந்த ஜான் அந்த சிறுமியின் உறவினர்களுக்கு பண ஆசை காட்டி அவரை 2-வது திருமணம் செய்தார்.

    இந்த விவரத்தை ஜான் தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் மறைத்து அந்த சிறுமியுடன் குருசு குப்பத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

    இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். 9 மாத கர்ப்பிணியான அந்த சிறுமி புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாள்.

    இதுபற்றிய தகவல் புதுவை குழந்தைகள் நல அமைப்பின் பாதுகாப்பு தலைவி வித்யா ராம் குமாருக்கு தெரிய வந்தது. அவர், இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வக்கீல் ஜான் அந்த சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கியது தெரிய வந்தது.

    இதையடுத்து குழந்தை திருமணம் செய்தல், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் (போஸ்கோ) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து வக்கீல் ஜானை கைது செய்தனர்.
    Next Story
    ×