என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர் தகுதி தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது
Byமாலை மலர்28 April 2017 2:43 AM GMT (Updated: 28 April 2017 2:43 AM GMT)
ஆசிரியர் தகுதி தேர்வு நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 7 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
சென்னை:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
எனவே ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது நடத்தப்படும் என்று ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து பிளஸ்-2 மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான தாள்1-க்கு 2 லட்சத்து 37ஆயிரத்து 293 பேரும், பி.எட். முடித்தவர்களுக்கான தாள்-2க்கு 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேரும் என மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ள தேர்வர்களுக்கு நாளையும்(சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடைபெறுகிறது. நாளை தாள்-1 தேர்வு 598 மையங்களிலும், நாளை மறுநாள் தாள்-2 தேர்வு 1,263 மையங்களிலும் நடைபெறுகிறது.
தேர்வு நடைபெறுவதை கண்காணிப்பதிலும், விடைத்தாள்களை ஆசிரியர் தேர்வு மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியை கண்காணிப்பதிலும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.
இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயசந்திரன் பிறப்பித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
எனவே ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது நடத்தப்படும் என்று ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆசிரியர் தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து பிளஸ்-2 மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான தாள்1-க்கு 2 லட்சத்து 37ஆயிரத்து 293 பேரும், பி.எட். முடித்தவர்களுக்கான தாள்-2க்கு 5 லட்சத்து 2 ஆயிரத்து 964 பேரும் என மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ள தேர்வர்களுக்கு நாளையும்(சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடைபெறுகிறது. நாளை தாள்-1 தேர்வு 598 மையங்களிலும், நாளை மறுநாள் தாள்-2 தேர்வு 1,263 மையங்களிலும் நடைபெறுகிறது.
தேர்வு நடைபெறுவதை கண்காணிப்பதிலும், விடைத்தாள்களை ஆசிரியர் தேர்வு மையங்களில் கொண்டு சேர்க்கும் பணியை கண்காணிப்பதிலும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர்.
இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் த.உதயசந்திரன் பிறப்பித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X