search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே பேக்கரி அதிபர் விபத்தில் பலி
    X

    ஆண்டிப்பட்டி அருகே பேக்கரி அதிபர் விபத்தில் பலி

    ஆண்டிப்பட்டி அருகே நடந்த விபத்தில் பேக்கரி அதிபர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது23). இவர் தேனி மாவட்டம் க.விலக்கு மற்றும் கொடுவிலார்பட்டி பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வந்தார்.  நேற்று கொடுவிலார்பட்டி கடையில் இருந்து க.விலக்கு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார்(24) என்பவருடன் வந்து கொண்டிருந்தார்.

    குன்னூர் டோல்கேட் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜேஷ் லாரி மீது பயங்கரமாக மோதினார். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். ரஞ்சித்குமார் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×