search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கிப்பட்டி அருகே மின் கம்பத்தில் கார் மோதி புது மாப்பிள்ளை பலி
    X

    செங்கிப்பட்டி அருகே மின் கம்பத்தில் கார் மோதி புது மாப்பிள்ளை பலி

    மனைவியை பார்க்க சென்ற புதுமாப்பிள்ளை மின்கம்பத்தில் கார் மோதி பலியனார்.

    பூதலூர்:

    தஞ்சை வடக்கு பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 27) இவருக்கும், திருச்சியை சேர்ந்த பெண்ணுக்கும் 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. இந்த நிலையில் திருச்சியில் இருக்கும் மனைவியை பார்க்க மோகன் ராஜ் விரும்பினார். அவர் இன்று காரில் திருச்சிக்கு புறப்பட்டார். அவரே காரை ஓட்டினார். அந்த கார் செங்கிப்பட்டி அருகே உள்ள புதுக்குடி பகுதியில் சென்ற போது எதிர் பாராதவிதமாக டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி கார் ரோட்டோர மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இதில் மோகன்ராஜ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×