என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரம் விடுதியில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை
Byமாலை மலர்27 April 2017 4:25 AM GMT (Updated: 27 April 2017 4:25 AM GMT)
ராமேசுவரம் விடுதியில் பெண் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் கீழவலசையில் உள்ள தனியார் லாட்ஜில் நேற்று முன்தினம் மோகன்லால் என்பவர் 35 வயது மதிக்கத்தக்க பெண், 3 வயதுடைய பெண் குழந்தையுடன் தங்கினார்.
நேற்று அவர்கள் கோவிலுக்கு சென்றதாக தெரிகிறது. இரவு திடீரென்று மோகன்லால் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்று விட்டார். அவர் தங்கி இருந்த அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையின் ஜன்னலை உடைத்து பார்த்தனர். அப்போது மோகன்லாலுடன் வந்திருந்த இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த ராமேசுவரம் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த தடயங்களையும் போலீசார் சேகரித்தனர்.
மோகன்லால் லாட்ஜ் பதிவேட்டில் கொடுத்திருந்த செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. மேலும் அவர் கொடுத்த முகவரியை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது.
குழந்தையுடன் தப்பிய நபர் அந்த பெண்ணை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலையான பெண் அவரின் மனைவியா? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம் கீழவலசையில் உள்ள தனியார் லாட்ஜில் நேற்று முன்தினம் மோகன்லால் என்பவர் 35 வயது மதிக்கத்தக்க பெண், 3 வயதுடைய பெண் குழந்தையுடன் தங்கினார்.
நேற்று அவர்கள் கோவிலுக்கு சென்றதாக தெரிகிறது. இரவு திடீரென்று மோகன்லால் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்று விட்டார். அவர் தங்கி இருந்த அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையின் ஜன்னலை உடைத்து பார்த்தனர். அப்போது மோகன்லாலுடன் வந்திருந்த இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்த ராமேசுவரம் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த தடயங்களையும் போலீசார் சேகரித்தனர்.
மோகன்லால் லாட்ஜ் பதிவேட்டில் கொடுத்திருந்த செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. மேலும் அவர் கொடுத்த முகவரியை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது.
குழந்தையுடன் தப்பிய நபர் அந்த பெண்ணை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலையான பெண் அவரின் மனைவியா? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X