என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.7 லட்சம் லஞ்சப்புகாரில் மத்திய வேளாண் அதிகாரிகள் 2 பேர் கைது
Byமாலை மலர்26 April 2017 7:28 AM GMT (Updated: 26 April 2017 7:28 AM GMT)
ரூ.7 லட்சம் லஞ்சப்புகாரில் மத்திய வேளாண் அதிகாரிகள் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை, தூத்துக்குடியில் மண்டல பயிர் பாதுகாப்பு தர நிறுவனம் மற்றும் பயிர் பாதுகாப்பு தர சேமிப்பு நிறுவனம் உள்ளது.
இதில் இணை இயக்குனர்களாக பணியாற்றும் டாக்டர் மாணிக்கம், சத்திய நாராயணா, உதவி பயிர் பாதுகாப்பு அதிகாரிகள் மகாராஜன், ராம்பிரதாப், ராஜ்குமார் ஆகியோர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டன.
இதையடுத்து சி.பி.ஐ. ரகசிய விசாரணை நடத்தி வந்தது. அதில் ஆதாரங்கள் கிடைத்ததால் 5 அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அதிகாரிகள் மாணிக்கம், சத்தியநாராயணா தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தபோது ரூ.7.10 லட்சம் பணம் இருந்தது.
அது லஞ்சப்பணம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மாணிக்கம், சத்தியநாராயணா ஆகிய 2 பேரையும் சி.பி.ஐ. கைது செய்தது.
மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை, தூத்துக்குடியில் மண்டல பயிர் பாதுகாப்பு தர நிறுவனம் மற்றும் பயிர் பாதுகாப்பு தர சேமிப்பு நிறுவனம் உள்ளது.
இதில் இணை இயக்குனர்களாக பணியாற்றும் டாக்டர் மாணிக்கம், சத்திய நாராயணா, உதவி பயிர் பாதுகாப்பு அதிகாரிகள் மகாராஜன், ராம்பிரதாப், ராஜ்குமார் ஆகியோர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டன.
இதையடுத்து சி.பி.ஐ. ரகசிய விசாரணை நடத்தி வந்தது. அதில் ஆதாரங்கள் கிடைத்ததால் 5 அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
அதிகாரிகள் மாணிக்கம், சத்தியநாராயணா தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தபோது ரூ.7.10 லட்சம் பணம் இருந்தது.
அது லஞ்சப்பணம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மாணிக்கம், சத்தியநாராயணா ஆகிய 2 பேரையும் சி.பி.ஐ. கைது செய்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X