என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருத்தாசலம் அருகே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் பலி
Byமாலை மலர்25 April 2017 9:35 AM GMT (Updated: 25 April 2017 9:35 AM GMT)
விருத்தாசலம் அருகே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில் இவர் சென்னையில் நடந்த அலுவலக உதவியாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் ஊருக்கு திரும்பி வந்த போது, திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரின் ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பிரகாசுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதை கண்டறிந்தனர்.
பின்னர், ஆஸ்பத்திரியில் அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
பன்றிக்காய்ச்சலால் பலியான பிரகாசுக்கு சாந்தி (36) என்ற மனைவியும், கிஷோர் (9) என்ற மகனும், சாருமதி (4) என்ற மகளும் உள்ளனர்.
விருத்தாசலம் அருகே உள்ள கம்மாபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). இவர் விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
சமீபத்தில் இவர் சென்னையில் நடந்த அலுவலக உதவியாளர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் ஊருக்கு திரும்பி வந்த போது, திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரின் ரத்த மாதிரியை எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பிரகாசுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு உள்ளதை கண்டறிந்தனர்.
பின்னர், ஆஸ்பத்திரியில் அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
பன்றிக்காய்ச்சலால் பலியான பிரகாசுக்கு சாந்தி (36) என்ற மனைவியும், கிஷோர் (9) என்ற மகனும், சாருமதி (4) என்ற மகளும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X