என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்: கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் மூடப்பட்டது
Byமாலை மலர்25 April 2017 4:56 AM GMT (Updated: 25 April 2017 4:57 AM GMT)
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன.
சென்னை:
விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 41 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி மொத்த வியாபாரிகள் முழுமையாக கடைகளை அடைத்து விட்டனர். சில்லரை வியாபாரிகளின் ஒருசில கடைகள் மட்டும் காலையில் ஆங்காங்கே திறந்திருந்தன.
ஆனால் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் திறந்திருந்த ஒருசில கடைகளும் படிப்படியாக அடைக்கப்பட்டு விட்டன.
வெளிமாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி லாரிகளும் இன்று காலை வரவில்லை. அவை அனைத்தும் சென்னைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பழம், பூ மார்க்கெட்டும் இன்று முழுமையாக மூடப்பட்டிருந்தன. பெரம்பூர், வில்லிவாக்கம் அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மந்தைவெளி, மயிலாப்பூர், ஆலந்தூர், சைதாப்பேட்டை, மாம்பலம், திருவான்மியூர், குன்றத்தூர் உள்பட பல பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன.
விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆகியவை முழுமையாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் கடைகள் அனைத்தும் இன்று முழுமையாக மூடப்பட்டு விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 41 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள காய்கறி மொத்த வியாபாரிகள் முழுமையாக கடைகளை அடைத்து விட்டனர். சில்லரை வியாபாரிகளின் ஒருசில கடைகள் மட்டும் காலையில் ஆங்காங்கே திறந்திருந்தன.
ஆனால் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் திறந்திருந்த ஒருசில கடைகளும் படிப்படியாக அடைக்கப்பட்டு விட்டன.
வெளிமாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி லாரிகளும் இன்று காலை வரவில்லை. அவை அனைத்தும் சென்னைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பழம், பூ மார்க்கெட்டும் இன்று முழுமையாக மூடப்பட்டிருந்தன. பெரம்பூர், வில்லிவாக்கம் அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மந்தைவெளி, மயிலாப்பூர், ஆலந்தூர், சைதாப்பேட்டை, மாம்பலம், திருவான்மியூர், குன்றத்தூர் உள்பட பல பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளும் முழுமையாக மூடப்பட்டிருந்தன.
விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் ஆகியவை முழுமையாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் கடைகள் அனைத்தும் இன்று முழுமையாக மூடப்பட்டு விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X