என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்: கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் மீது புகார்
Byமாலை மலர்24 April 2017 10:11 AM GMT (Updated: 24 April 2017 10:12 AM GMT)
பிளஸ்-2 மாணவியை கடத்தியதாக கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எம்.கல்லுப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட டி.பாறை பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயபாண்டி என்பவருக்கும் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இரவு மாணவி திடீரென மாயமாகி விட்டார்.
இதுகுறித்து அவரது தந்தை எம்.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை ஜெயபாண்டி, அவரது தாய் பாஞ்சாயி, சகோதரி பாண்டீஸ்வரி, நண்பர்கள் சின்னதம்பி, செல்வேந்திரன், ராஜபாண்டி ஆகியோர் கடத்தி இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X