search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
    X

    சிவகாசி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

    சிவகாசி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறியும் எந்த நடவடிககையும் எடுக்கவில்லை.

    குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய வலியுறுத்தி இன்று காலை ஈஞ்சார் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 80-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 2 மணி நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் விரக்தி அடைந்தனர். இதையடுத்து சிவகாசி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

    Next Story
    ×