என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே புதுமண தம்பதி விபத்தில் பலி
Byமாலை மலர்24 April 2017 5:44 AM GMT (Updated: 24 April 2017 5:44 AM GMT)
திருமங்கலம் அருகே மினிலாரி மோதிய விபத்தில் புதுமண தம்பதியினர் பரிதாபமாக இறந்தனர். திருமணமான 4 மாதத்தில் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
பேரையூர்:
மதுரை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவருக்கும், ஜோதி (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இருவரும் காரியாபட்டி அருகே ஆவியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி 2 பேரும் மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். ஆவியூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருமங்கலம் அருகே பாறைபத்தி டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது சக்திவேல் 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது தூத்துக்குடிக்கு சென்ற மினி லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் பிரபு என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 4 மாதத்தில் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவருக்கும், ஜோதி (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இருவரும் காரியாபட்டி அருகே ஆவியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி 2 பேரும் மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். ஆவியூருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருமங்கலம் அருகே பாறைபத்தி டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது சக்திவேல் 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது தூத்துக்குடிக்கு சென்ற மினி லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த கணவனும், மனைவியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த மினி லாரி டிரைவர் பிரபு என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 4 மாதத்தில் விபத்தில் சிக்கி புதுமண தம்பதி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X