என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவில்பட்டி அருகே இளம்பெண் மர்ம மரணம்: போலீசார் விசாரணை
கோவில்பட்டி:
கோவில்பட்டி பண்ணை தோட்ட தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (வயது35). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (33). இவர்களது மகன் மூர்த்தி (9). இவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டான்.
மகன் இறந்த துக்கம் தாங்காமல் பரமேஸ்வரி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். அவருக்கு பரமசிவன் ஆறுதல் கூறி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பரமசிவன் மனைவிக்கு போன் செய்து நான் நாளை (இன்று) ஊருக்கு வருகிறேன் என கூறினார். அதன்படி இன்று காலை திருப்பூரில் இருந்து பரமசிவன் தனது வீட்டிற்கு வந்தார்.
அப்போது அவர் கதவை திறந்து பார்த்த போது அங்கு பரமேஸ்வரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கோவில் பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பரமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மகன் இறந்த துக்கத்தில் பரமேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்