search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாடிப்பட்டியில் பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
    X

    வாடிப்பட்டியில் பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

    பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    வாடிப்பட்டி:

    கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் தெற்குத் தெருவைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும், அவரது உறவினரான மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வீரப்பன் நகரைச் சேர்ந்த முருகன் மகன் ராஜ்குமாருக்கும் (வயது 28)கடந்த 23.1.17 அன்று திருமணம் நடந்தது. ராஜ்குமார் வேன் டிரைவராக உள்ளார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்.

    மேலும் இது தொடர்பாக மதுரை சமூக விரிவாக்க அலுவலர் பானுமதி கொடுத்த புகாரின் பேரில் ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×