என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சோழவரம் அருகே காவலாளி அடித்து கொலை
செங்குன்றம்:
சோழவரத்தை அடுத்த மாபூஸ்கான்பேட்டை, பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பாபு (வயது 54). அனுமந்தை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். தினமும் இரவில் தென்னந் தோப்பில் தங்குவது வழக்கம்.
நேற்று இரவும் அவர் அங்கு காவல் பணியில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள மதில்சுவர் அருகே பாபு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகில் ரத்தக் கறையுடன் உருட்டுக்கட்டை கிடந்தது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் பாபுவை உருட்டுக் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருப்பது தெரிந்தது.
இது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. கண்ணன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பாபுவின் உடல் பிரேதபரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கொலைக்கான காரணம்? கொலையாளிகள் யார்? என்று தெரியவில்லை. தென்னந்தோப்புக்குள் புகுந்த கொள்ளை கும்பலை தடுத்ததால் பாபு தீர்த்து கட்டப்பட்டாரா? அல்லது முன்விரோதத்தில் யாரேனும் திட்டமிட்டு கொலை செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்