என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில் திருவிழா: குண்டத்தில் தவறி விழுந்து 20-க்கு மேற்பட்ட பக்தர்கள் படுகாயம்
Byமாலை மலர்22 April 2017 5:13 AM GMT (Updated: 22 April 2017 5:13 AM GMT)
நன்னிலம் அருகே கோவில் திருவிழாவில் சப்பரத்துடன் குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் தவறி விழுந்து 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.
பேரளம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
விழாவையொட்டி மேலதென்குடியிலிருந்து சப்பரத்தில் காத்தவராயன் சுவாமியை அலங்கரித்து வைத்து தோளில் சுமந்து கொண்டு பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அப்போது குண்டத்தில் சப்பரத்துடன் இறங்கியவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 40) விஸ்வநாதன்(33) தமிழரசன் (30) ரெங்கநாதன் (25) ரத்தினவேல் (35) விக்னேஷ் (24) ஜெயராமன் (65) சந்திரசேகர் (45) ராஜேஷ் (25) பிரபு (24) சந்தோஷ் (20) உள்பட 20-க்கு மேற்பட்ட பக்தர்கள் தீ காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
பக்தர்கள் எடுத்து வந்த சப்பரம்
விழாவையொட்டி மேலதென்குடியிலிருந்து சப்பரத்தில் காத்தவராயன் சுவாமியை அலங்கரித்து வைத்து தோளில் சுமந்து கொண்டு பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அப்போது குண்டத்தில் சப்பரத்துடன் இறங்கியவர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 40) விஸ்வநாதன்(33) தமிழரசன் (30) ரெங்கநாதன் (25) ரத்தினவேல் (35) விக்னேஷ் (24) ஜெயராமன் (65) சந்திரசேகர் (45) ராஜேஷ் (25) பிரபு (24) சந்தோஷ் (20) உள்பட 20-க்கு மேற்பட்ட பக்தர்கள் தீ காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X