search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ். - எடப்பாடி இணைந்தால் மகிழ்ச்சி: நடிகர் செந்தில்
    X

    ஓ.பி.எஸ். - எடப்பாடி இணைந்தால் மகிழ்ச்சி: நடிகர் செந்தில்

    ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சியடைவேன் என்று நடிகர் செந்தில் கூறினார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடிகர் செந்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் 2 அணிகளையும் சார்ந்தவன் இல்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி நான்.

    இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ? அங்கு நான் இருப்பேன். அவர்களுக்கு என்னுடைய ஆதரவு இருக்கும். ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் கூட எந்த அணிக்கும் நான் ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளவில்லை.

    ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சியடைவேன். தற்போது நான் நடிகர் சூர்யாவின் ‘பட்ற’ என்ற படம் உள்பட 6 படங்களில் நடித்து வருகிறேன்.

    இதுவரை மொத்தம் 6 மொழிகளிலான படங்களில் நடித்துள்ளேன் என்றார்.
    Next Story
    ×