என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.பி.எஸ். - எடப்பாடி இணைந்தால் மகிழ்ச்சி: நடிகர் செந்தில்
Byமாலை மலர்21 April 2017 7:50 AM GMT (Updated: 21 April 2017 11:33 AM GMT)
ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சியடைவேன் என்று நடிகர் செந்தில் கூறினார்.
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடிகர் செந்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் 2 அணிகளையும் சார்ந்தவன் இல்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி நான்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ? அங்கு நான் இருப்பேன். அவர்களுக்கு என்னுடைய ஆதரவு இருக்கும். ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் கூட எந்த அணிக்கும் நான் ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சியடைவேன். தற்போது நான் நடிகர் சூர்யாவின் ‘பட்ற’ என்ற படம் உள்பட 6 படங்களில் நடித்து வருகிறேன்.
இதுவரை மொத்தம் 6 மொழிகளிலான படங்களில் நடித்துள்ளேன் என்றார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடிகர் செந்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் 2 அணிகளையும் சார்ந்தவன் இல்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி நான்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ? அங்கு நான் இருப்பேன். அவர்களுக்கு என்னுடைய ஆதரவு இருக்கும். ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் கூட எந்த அணிக்கும் நான் ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் இரு அணிகளும் இணைந்து செயல்பட்டால் மகிழ்ச்சியடைவேன். தற்போது நான் நடிகர் சூர்யாவின் ‘பட்ற’ என்ற படம் உள்பட 6 படங்களில் நடித்து வருகிறேன்.
இதுவரை மொத்தம் 6 மொழிகளிலான படங்களில் நடித்துள்ளேன் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X