search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
    X

    காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

    ராசிபுரம் அருகே காதலன் திருமணத்துக்கு மறுத்ததால் வி‌ஷம் குடித்த இளம்பெண் இறந்து போனார்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பி.மேட்டூர் பிச்சாம்பாளையம் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி. தனியார் பஸ் டிரைவர். இவரது மகள் விஜயலட்சுமி (வயது 20). அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கார்த்தியின் மகன் விஜய்பிரபு (22), பி.இ.பட்டதாரி. விஜயலட்சுமியும், விஜய்பிரபுவும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக விஜய்பிரபு கூறி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் விஜய்பிரபுவிடம், விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று விஜய்பிரபு கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் விரக்தி அடைந்த விஜயலட்சுமி கடந்த 13–ந் தேதி இரவு அவரது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை (வி‌ஷம்) குடித்துவிட்டார். இதில் அவர் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார். உடனடியாக விஜயலட்சுமியை அவரது உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுபற்றி ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்–இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர், விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து ஏமாற்றி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலன் விஜய்பிரபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே விஜயலட்சுமியின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜயலட்சுமி சாவுக்கு காரணமான விஜய்பிரபுவை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் அவர்களிடம், விஜய்பிரபுவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் விஜயலட்சுமியின் உடலை பெற்று சென்றனர்.

    இதற்கிடையில் விஜயலட்சுமியின் காதலன் விஜய்பிரபுவும் நேற்று வி‌ஷம் குடித்தார். அவர் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காதலி வி‌ஷம் குடித்து இறந்ததால் காதலனும் வி‌ஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×