search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியபாளையம் அருகே மணல் கடத்திய லாரி சிறை பிடிப்பு
    X

    பெரியபாளையம் அருகே மணல் கடத்திய லாரி சிறை பிடிப்பு

    பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தை அடுத்த தும்பாக்கம் ஆரணி ஆற்றில் மர்ம நபர்கள் மணல் கடத்தி வருகிறார்கள். அதிக அளவு மணல் அள்ளப்பட்டதால் அப்பகுதி பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று காலையும் மர்ம கும்பல் ஆரணி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் தும்பாக்கம் கிராம மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்றனர். அவர்களை கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதையடுத்து மணல் அள்ள பயன்படுத்திய ஜெ.சி.பி. எந்திரம், மற்றும் 2 டிப்பர் லாரிகள், டிராக்டரை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

    தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா, இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடம் சிறை பிடித்த வாகனங்களை பொதுமக்கள் ஒப்படைத்தனர். மேலும் மணல் கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    மணல் கடத்தல் லாரிகள் செல்லாமல் இருக்க ஆரணி ஆற்றுப்பாதையில் பெரிய பள்ளங்களை மக்கள் தோண்டி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×