என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3-வது யூனிட் பழுது: மின் உற்பத்தி பாதிப்பு
Byமாலை மலர்20 April 2017 4:17 AM GMT (Updated: 20 April 2017 4:17 AM GMT)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3-வது யூனிட் பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடந்த 1979-ம் ஆண்டு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உடைய 5 யூனிட்கள் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த அனல்மின் நிலையம் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட் காலத்தையும் தாண்டி இயங்கி வருகிறது.
இங்குள்ள அனைத்து யூனிட்களிலும் அடிக்கடி பழுது ஏற்படுவதும், இதன் காரணமாக மின் உற்பத்தி தடைபடுவதும், பின்னர் அவை சரி செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகை மின் உற்பத்தி காரணமாக 1-வது யூனிட்டில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் அந்த யூனிட் மீண்டும் இயங்க தொடங்கியது. இந்நிலையில் நேற்று காலை 3-வது யூனிட்டின் கொதிகலனில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மொத்த உற்பத்தியில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலனின் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் என்ஜினீயர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த 1979-ம் ஆண்டு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உடைய 5 யூனிட்கள் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த அனல்மின் நிலையம் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட் காலத்தையும் தாண்டி இயங்கி வருகிறது.
இங்குள்ள அனைத்து யூனிட்களிலும் அடிக்கடி பழுது ஏற்படுவதும், இதன் காரணமாக மின் உற்பத்தி தடைபடுவதும், பின்னர் அவை சரி செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகை மின் உற்பத்தி காரணமாக 1-வது யூனிட்டில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் அந்த யூனிட் மீண்டும் இயங்க தொடங்கியது. இந்நிலையில் நேற்று காலை 3-வது யூனிட்டின் கொதிகலனில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மொத்த உற்பத்தியில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலனின் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் என்ஜினீயர் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X