என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க அணிகள் பேச்சுவார்த்தையில் நன்மை ஏற்படும் வகையில் நல்ல முடிவு ஏற்படும்: தோப்பு வெங்கடாச்சலம்
Byமாலை மலர்19 April 2017 10:31 AM GMT (Updated: 19 April 2017 10:31 AM GMT)
அ.தி.மு.க அணிகள் பேச்சுவார்த்தை நன்மை ஏற்படும் வகையில் நல்ல முடிவு ஏற்படும் என பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடந்தது. பெரும்பாலான அமைச்சர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் எம்.எல்.ஏக்களும் சென்னை வரும்படி அவசர அழைப்பு அனுப்பப்பட்டது . இதையொட்டி அவர்கள் சென்னை சென்றனர்.
முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலமும் சென்னை சென்றார்.
அவர் இன்று மாலை மலர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் சூழ்நிலையை சட்டமன்ற உறுப்பினர்களாக நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
நாட்டுக்கும்,வாக்களித்த தொகுதி மக்களின் நலனுக்காகவும், நன்மை ஏற்படும் விதத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு ஏற்ப எங்களின் முடிவு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்க முடிவு செய்திருப்பது தொடர்பாக அவரிடம் கேட்ட போது இப்போது அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறினார்.
தோப்பு வெங்கடாச்சலம் எம். எல்.ஏ ஏற்கனவே மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்கள் இப்போது நிறைவேற்றப்படவில்லை. ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றினால் தான் வருகிற உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 6 தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சென்னை சென்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ தென்னரசும், பவானி சாகர் தொகுதி எம்.எல்.ஏ ஈஸ்வரனும் நேற்று சென்னை செல்லவில்லை.
இவர்கள் இருவரும் இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர்.
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடந்தது. பெரும்பாலான அமைச்சர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில் எம்.எல்.ஏக்களும் சென்னை வரும்படி அவசர அழைப்பு அனுப்பப்பட்டது . இதையொட்டி அவர்கள் சென்னை சென்றனர்.
முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலமும் சென்னை சென்றார்.
அவர் இன்று மாலை மலர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இப்போது ஏற்பட்டு உள்ள அரசியல் சூழ்நிலையை சட்டமன்ற உறுப்பினர்களாக நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
நாட்டுக்கும்,வாக்களித்த தொகுதி மக்களின் நலனுக்காகவும், நன்மை ஏற்படும் விதத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு ஏற்ப எங்களின் முடிவு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்க முடிவு செய்திருப்பது தொடர்பாக அவரிடம் கேட்ட போது இப்போது அது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறினார்.
தோப்பு வெங்கடாச்சலம் எம். எல்.ஏ ஏற்கனவே மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்கள் இப்போது நிறைவேற்றப்படவில்லை. ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றினால் தான் வருகிற உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 6 தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சென்னை சென்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ தென்னரசும், பவானி சாகர் தொகுதி எம்.எல்.ஏ ஈஸ்வரனும் நேற்று சென்னை செல்லவில்லை.
இவர்கள் இருவரும் இன்று காலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X