என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு: எழும்பூர் கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
Byமாலை மலர்18 April 2017 10:02 AM GMT (Updated: 18 April 2017 10:09 AM GMT)
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பான விசாரணை எழும்பூர் கோர்ட்டில் தள்ளிவைக்கப்பட்டது.
சென்னை:
சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால், சசிகலாவை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும் அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு மத்திய அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜாகீர் உசேன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை புதன் கிழமைக்கு (நாளை) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை நேரில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
ஆனால், சசிகலாவை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும் அவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு மத்திய அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜாகீர் உசேன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை புதன் கிழமைக்கு (நாளை) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X