search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்
    X

    உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்

    உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கொடிக்குளத்தில் உள்ள மதுபானக்கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல் செய்து கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    உசிலம்பட்டி:

    கொடிக்குளம் காலனி அருகே சாலை முன்பு உள்ள மதுபானக் கடையால் பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்று கூறி பெண்கள் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் செய்தனர்.

    மதுரையில் இருந்து சோழவந்தான், விக்கிரமங்கலம் செல்லும் டவுன் பஸ்கள் முன்பு மறியல் செய்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மது பானக்கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு வாரகாலத்திற்குள் மதுபான கடையை அகற்ற வேண்டும் என்றும் இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று கிராமத்தினர் கூறினர்.

    Next Story
    ×