search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் கடும் வறட்சி: குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து வெள்ளரி பயிரை காப்பாற்றும் விவசாயிகள்
    X

    அரியலூரில் கடும் வறட்சி: குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து வெள்ளரி பயிரை காப்பாற்றும் விவசாயிகள்

    அரியலூர் மாவட்டத்தில் கடும் வறட்சியால் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து வெள்ளரி பயிரை விவசாயிகள் காப்பாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யவில்லை. மேலும் நடப்பாண்டிலும் இதுவரை கனமழை இல்லை. இதனால் மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகிறது. அரியலூர் பகுதியில் வெள்ளரிக்காய் சாகுபடி பரவலாக செய்யப்பட்டு வருகிறது.

    அரியலூர்- திருச்சி சாலையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை நேரமாகும். ஆனால் போதிய தண்ணீரின்றி வெள்ளரி கொடி நோய் தாக்குதலுக்கு ஆளாகி கருக தொடங்கியது. இதனால் 3 மாதம் பாடுபட்டு காப்பாற்றிய பயிரை அழிய விட மனமின்றி அருகில் உள்ள சித்தேரியில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடத்தில் கொண்டு வந்து பயிரை காப்பாற்றி வருகின்றனர் விவசாயிகள்.

    இது குறித்து வெள்ளரி பயிரிட்டுள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளரி பயிரிட்டேன். போதிய மழை பெய்யவில்லை. கோடை மழையாவது பெய்யும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கான அறிகுறிகளே இல்லை. இருப்பினும் பாடுபட்டு வளர்த்த பயிரை காப்பாற்ற வேண்டுமே என்று குடம் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி பயிரை காப்பாற்றி வருகிறேன். இதனால் அறுவடையை தொடங்கி விட்டேன் என்றார்.
    Next Story
    ×