search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ந்து 40 அடியில் இருக்கும் பவானிசாகர் அணை
    X

    தொடர்ந்து 40 அடியில் இருக்கும் பவானிசாகர் அணை

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீர்மட்டம் 40.22 அடியாக உள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வரும் பவானிசாகர் அணை தற்போது கடும் வறட்சி காரணமாகவும் தண்ணீர் வரத்து அதிகம் இல்லாததாலும் வறண்டு போய் கிடக்கிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 15 அடி சேறும்- சகதியும் கொண்டது 105 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 40.22 அடியாக உள்ளது. ஊட்டி மலை பகுதியில் உள்ள அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 155 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கோடைமழை பெய்தால் அணைக்கு மேலும் தண்ணீர் வரும் என்பதால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருக்கிறார்கள்.
    Next Story
    ×