என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரத்தில் ஜெர்மனி பெண்ணை கற்பழித்த 2 பேர் சிக்கினர்
Byமாலை மலர்11 April 2017 8:57 AM GMT (Updated: 11 April 2017 8:57 AM GMT)
மாமல்லபுரத்தில் ஜெர்மனி பெண்ணை கற்பழித்த 2 பேரின் புகைப்படத்தை அவருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் அனுப்பிய போலீசார் குற்றவாளிகளை உறுதி செய்தனர்.
திருப்போரூர்:
ஜெர்மனி நாட்டை சேர்ந்த லோமன் ஜென்னு என்ற பெண் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார்.
கடந்த 2-ந்தேதி பட்டிபுலம் கடற்கரையில் அவர் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது 3 பேர் கும்பல் அவரை கத்தி முனையில் மிரட்டி அருகில் உள்ள சவுக்கு தோப்புக்குள் தூக்கி சென்று கற்பழித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
பின்னர் லோமன் ஜென்னு வாரணாசிக்கு சென்று விட்டார். இதையடுத்து குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களின் புகைப்படத்தை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமனி தலைமையில் தனிப் படை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்களின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் மூலம் லோமன் ஜென்னுக்கு போலீசார் அனுப்பினர். இதில் ஒருவர் தன்னை கற்பழித்த குற்றவாளி என்று அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதையடுத்து பிடிபட்ட 2 வாலிபர்களையும் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களின் கூட்டாளிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குற்றவாளிகளை நேரில் அடையாளம் காட்ட லோமன் ஜென்னுவை மாமல்லபுரத்துக்கு வருமாறு போலீசார் அழைத்து உள்ளனர். அவர் ஓரிரு நாளில் இங்கு வருவார் என்று தெரிகிறது.
இது குறித்து தனிப்படை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கற்பழிப்பு சம்பவம் நடந்த நேரத்தில் பட்டிபுலம் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான அழைப்புகளை வைத்து விசாரணையை தொடங்கினோம்.
சுமார் 400 அழைப்புகள் பதிவாகி இருந்தது. இதில் சந்தேகத்திற்கிடமான 50 பேர் பட்டியலை சேகரித்து ரகசியமாக கண்காணித்து 2 பேரை பிடித்து உள்ளோம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த லோமன் ஜென்னு என்ற பெண் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார்.
கடந்த 2-ந்தேதி பட்டிபுலம் கடற்கரையில் அவர் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது 3 பேர் கும்பல் அவரை கத்தி முனையில் மிரட்டி அருகில் உள்ள சவுக்கு தோப்புக்குள் தூக்கி சென்று கற்பழித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
பின்னர் லோமன் ஜென்னு வாரணாசிக்கு சென்று விட்டார். இதையடுத்து குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களின் புகைப்படத்தை ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சந்தேகத்துக்கிடமான 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களை திருப்போரூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமனி தலைமையில் தனிப் படை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அவர்களின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் மூலம் லோமன் ஜென்னுக்கு போலீசார் அனுப்பினர். இதில் ஒருவர் தன்னை கற்பழித்த குற்றவாளி என்று அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதையடுத்து பிடிபட்ட 2 வாலிபர்களையும் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களின் கூட்டாளிகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
குற்றவாளிகளை நேரில் அடையாளம் காட்ட லோமன் ஜென்னுவை மாமல்லபுரத்துக்கு வருமாறு போலீசார் அழைத்து உள்ளனர். அவர் ஓரிரு நாளில் இங்கு வருவார் என்று தெரிகிறது.
இது குறித்து தனிப்படை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, கற்பழிப்பு சம்பவம் நடந்த நேரத்தில் பட்டிபுலம் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான அழைப்புகளை வைத்து விசாரணையை தொடங்கினோம்.
சுமார் 400 அழைப்புகள் பதிவாகி இருந்தது. இதில் சந்தேகத்திற்கிடமான 50 பேர் பட்டியலை சேகரித்து ரகசியமாக கண்காணித்து 2 பேரை பிடித்து உள்ளோம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X