search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் அருகே நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் மீட்பு
    X

    கடலூர் அருகே நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் மீட்பு

    கடலூர் அருகே நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

    காரைக்கால்:

    கடலூர் அருகே கடந்த 3-ந் தேதி இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான அமயா கப்பலில் வீரர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் 5 பேர் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

    அவர்களிடம் விசாரித்தபோது மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது எங்கள் விசைப்படகு பழுதாகி விட்டது. எனவே எங்களால் கரை திரும்பமுடியவில்லை. காற்று வீசும் திசைக்கேற்ப எங்கள் படகு இங்கு வந்து விட்டது என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து இலங்கை மீனவர்கள் 5 பேரையும் கப்பலில் அழைத்துச் சென்று இலங்கை கடற்படை வீரர்களிடம் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×