search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜீயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்: 2 பேர் பலி
    X

    ஜீயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்: 2 பேர் பலி

    ஜீயபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியதில் 2 பேர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஜீயபுரம்:

    திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே அல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55). மாட்டு வண்டி ஓட்டுபவர். அதே பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (42). நேற்று மாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து கரூர் சாலையில் ஜீயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    சுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். திருச்செந்துறை சிவன் கோவில் வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திருச்சியில் இருந்து வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி மற்றும் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக டேங்கர் லாரி டிரைவர் பூபாலனை(27) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×