search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை
    X

    ஈரோடு மாவட்டத்தில் 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை

    பெட்ரோல்,டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் இன்று 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.
    ஈரோடு:

    பெட்ரோல்,டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். வேக கட்டுப்பாடு கருவி பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரைற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    இதன்படி இன்று (வியாழக்கிழமை) காலை முதல் வேலை நிறுத்தம் தமிழகம் முழுவதும் தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மஞ்சள், ஜவுளி, எண்ணை வித்துக்கள், இரும்பு பொருட்கள் போன்ற பொருட்களை ஏற்றி கொண்டு தினமும் 3500 லாரிகள் செல்கின்றன,

    மேலும் 3500 லாரிகள் ஈரோடு மாவட்டத்துக்குள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளி மாநிலத்துக்கு செல்லும் 3500 லாரிகளும் நேற்று இரவு முதலே நிறுத்தப்பட்டு விட்டன.ஈரோடு மாவட்டத்துக்குள் ஒடும் லாரிகள் இன்று காலை முதல் ஓடவில்லை.

    இந்த வேலை நிறுத்தத்துக்கு லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் ஆதரவு தொவித்து உள்ளனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் முதலே லாரி புக்கிங் அலுவலகங்களில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் வாங்குவது நிறுத்தப்பட்டு விட்டது .

    இந்த லாரி ஸ்டிரைக் காரணமாக தினமும் கோடிக்கண்கான ரூபாய் பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன. ஒரு நாளைக்கு சுமார்ரூ. 10 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஈரோடு மாவட்டத்தில் தேக்கம் அடையும் என்று கூறப்பட்டு உள்ளது .

    பெருந்துறை, சத்தியமங்கலம் , கோபி பவானி,சென்னிமலை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள லாரிகளும் இன்று முதல் ஓடவில்லை.
    Next Story
    ×