என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சி அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளி கொலை: வாலிபர் வெறிச்செயல்
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் வீரபாண்டி (வயது 20), தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (22). வீரபாண்டிக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவில் இருவரும் பங்கேற்றனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தனர். இதில் அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த சதீஷ்குமார், வீரபாண்டியை கத்தியால் குத்தினார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வீரபாண்டி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை தொடர்பாக சதீஷ்குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சதீஷ்குமாரின் தாய்க்கும், வீரபாண்டியின் தந்தைக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக வீரபாண்டிக்கும், சதீஷ்குமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரத்தில் சதீஷ்குமார், வீர பாண்டியை குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்