search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரே நாளில் தஞ்சம் அடைந்த 3 காதல் ஜோடிகள்
    X

    மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரே நாளில் தஞ்சம் அடைந்த 3 காதல் ஜோடிகள்

    தாராபுரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 3 காதல் ஜோடி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தாராபுரம்:

    தாராபுரம் அருகே காங்கயம் பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்தகுமார் (வயது 25). ஈரோடு மாவட்டம் ஒலகடம் குலாலர் வீதியை சேர்ந்தவர் சத்யா (21). இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஒரே கம்பெனியில் வேலை பார்த்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இவர்களது காதல் விவகாரம் சத்யா பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் சத்யாவுக்கு உறவுக்கார வாலிபர் ஒருவருரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சத்யா, அரவிந்தகுமாரிடம் தெரிவித்தார். பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி தாராபுரம் தில்லாபுரியம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தாராபுரம் மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த நாயகி விசாரணை நடத்தினார். மேலும் இருதரப்பு பெற்றோரும் வரவழைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அரவிந்தகுமாரின் பெற்றோர் காதலை ஏற்று கொண்டனர். சத்யாவின் பெற்றோர் காதல் திருமணத்தை ஏற்க மறுத்து விட்டனர்.

    இதைதொடர்ந்து அரவிந்தகுமார், காதல் மனைவியை தனது பெற்றோர் சம்மதத்துடன் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    தாராபுரம் வடசாலை பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (24). இவர் ஒரு மைனர் பெண்ணை காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று தாராபுரம் மகளிர் போலீசில் கணேஷ், காதலியுடன் தஞ்சம் அடைந்தார்.

    அப்போது போலீசார், இளம்பெண்ணுக்கு 18 வயது ஆக இன்னும் 3 மாதம் உள்ளது. சட்டப்படி மைனர் பெண்ணை திருமணம் செய்ய முடியாது ’ என்று அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து காதல் ஜோடி ஏமாற்றத்துடன் புறப்பட்டு சென்றனர்.

    இதேபோல் திருப்பூர் அனுப்பர்பாளையம் பனியன் கம்பெனியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி வேலை பார்த்து வந்தனர்.

    இந்த காதல் ஜோடியினர், நேற்று தாராபுரம் மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்களிடம் முறையான ஆவணம் எதுவும் இல்லாததால் போலீசார் காதல் ஜோடியை திருப்பி அனுப்பி விட்டனர்.

    தாராபுரம் மகளிர் போலீசில் நேற்று ஒரே நாளில் 3 காதல் ஜோடி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×