என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயத்தை அழிக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது: ஆர்.சரத்குமார்
Byமாலை மலர்29 March 2017 2:19 AM GMT (Updated: 29 March 2017 2:19 AM GMT)
விவசாயத்தை அழிக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர்-தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயத்தை அழிக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள்நீண்ட போராட்டம் நடத்தினர். பிறகு மத்திய-மாநில அரசுகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது டெல்லியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து கையெழுத்தாகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுக்கவேண்டும். மீண்டும் இந்த திட்டத்தை எதிர்த்து சமத்துவ மக்கள் கட்சியின் சகோதரர்கள் போராடுவார்கள். விவசாயத்தின் நன்மைகளை புரிந்துகொண்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம், விவசாயத்தை காப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர்-தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயத்தை அழிக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள்நீண்ட போராட்டம் நடத்தினர். பிறகு மத்திய-மாநில அரசுகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது டெல்லியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்து கையெழுத்தாகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுக்கவேண்டும். மீண்டும் இந்த திட்டத்தை எதிர்த்து சமத்துவ மக்கள் கட்சியின் சகோதரர்கள் போராடுவார்கள். விவசாயத்தின் நன்மைகளை புரிந்துகொண்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம், விவசாயத்தை காப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X